Friday, October 27, 2023

E=ஓம் (வ.தாராயோ..சிறுகதை-4)

  E = ஓம்!

 கிருதகயுகம். எஐஉக வருடம்.! ப10மியின் ஓர் இருளடைந்த வனப் பகுதி. ஸ{வாஹிமாதா  பத்மாசனமிட்டு உட்கார்ந்திருந்தாள்.  ஆனால்ää கரங்களிரண்டும்ää தலைக்கு மேலே உயர்த்தி வணக்கமிட்டிருந்தன. ஸ{வாஹிமாதாவைச் சுற்றிலும்ää கறையான் புற்றுக்கள்.  தலைமுழுக்க பட்சிகளின் கூடுகள். இரைச்சல்கள். ஸ{வாஹிமாதாவின் கால்களை  புற்று முழுவதுமாக மூடியிருந்தது.  இப்படியே ஸ{வாஹிமாதா  ஏழு பஞ்சாங்க காலமாக இருந்து வருகிறாள்.  உடம்பில் ஒரு சிறு அசைவுமில்லை. ப10மியிலேயே முளைத்தெழுந்தது போல் அமர்ந்திருந்தாள். கண்கள் நிரந்தரமாக மூடியிருந்தன. தூரத்திலுன்ன ஆசிரம முனிபுங்குவர்களைத் தவிர  எவருக்கும் மாதாவின் நிஷ்டை தெரியாது.

       அந்த ஆசிரமத்திலிருந்துää குரு உபமந்யு வெளியே வந்தார். முனிபுங்குவர் எழுவர் அவரின் பின் வந்தனர். குருஉபமந்யு நேராக ஸ{வாஹிமாதாவின் இருப்புச் சமாதி நிலையருகே வந்துää சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். மாதாவின் உதடுகள் மட்டும் மெல்லியதாய்  அசைவது  இலேசாகத் தெரிந்தது.  ஒலியில்லை. நிசப்த அசைவு. எனினும் அது ஓம்’ என்ற  பிரணவ ஒலியின் அலை வடிவம். அந்த அலை வரிசைகள் மாதாவுக்குள்  பிரமாண்டமாய் ஒலிக்கும்.  இது குருவுக்குப் புரியும்.  அந்த முனிபுங்குவர் எழுவரும்  முழந்தாளிட்டு வணங்கினர். குருவும் முழந்தாளிட்டார்.

 ஹோய்..! மஹா வலிமையே..! சக்தியைத் தேடிய பிராகுவியர்ääதோடர்களிடம் நுமது விலமையைக் காட்டி ஆட்கொண்டமை போல்ää {வாஹிமாதாவுக்கும் நுமது விஸ்வரூபம் காட்டியருள்வாய்..  ஓம்..!

       ஆனால்ää மாhவுக்கு இது எதுவும் தெரியாது. குருஉபமந்யு மட்டும அறிவார். அவரது இடையறாப் பயிற்சியால்தான் மாதா இநத்தவத்தில் ஆழ்ந்தாள். அத்துவிதமுத்தி நிலையை நோக்கி மாதா விரைவாக முன்னேறிக் கொண்டிருநதாள்.  ஆனால்ää அதற்கொரு முடிவு கிடக்குமா..காலவரையஇருக்காது. காலத்தையும் கடந்ததே சக்தி.  ஆத்துவிதமுத்தியை அடையும் நீண்ட பயணத்தில்ää  பல சிஷ்யர்களை குரு இழந்திருந்தார்.  எவரும் இரண்டு பஞ்சாங்க காலத்துக்குத் தாக்குப் பிடிக்க்க முடியவில்லை.  ஸ{வாஹிமாதா ஏழாவது நபர். பலிபீடத்தில் ஒரு தாய் ஆடு. இதி;ல் குரு வெற்றி பெற்றுவிட்டால்ää சக்தியின் வடிவ இலக்கணம் தெரிந்து விடும். மனவலிமைக்குள் அது அடங்கிவிடும். அது தெரிந்த பின்..?  ‘நானும் ஒரு கடவுள்.”  குரு உபமந்யுவின் தாடியை கண்ணீர் நனைத்தது. முழந்தாளிட்டிருந்தவர் மெதுவாக உச்சரிக்க ஆரம்பித்தார்.

 சக்தி  ஓ..ம்..!

()

       திரிலேனிய யுகம்.! கி.பி. 3006 ம் ஆண்டு.! எல்லையற்ற விண்வெளிப் பரப்பில்ää ஒரு மூலையில்ää ஒரு இடம். இதனைடெல்டாவெளி’ என்பர்.  அந்தர நிலையில்ää  ஒரு விண்வெளி ஆய்வு கூடம். அதனுள் லாவண்யா உட்கார்ந்திருந்தாள். கரங்களிரண்டும்ää தலைக்கு மேல் இருந்த பேசிமிலியின் மீதுசீஆர்எஸ்.’ கதிர்களைப் பிரயோகித்துக் கொண்டிருந்தன. லாவண்யாவைச் சுற்றிலும் ஏழு ரோபோக்கள் உட்கார்ந்திருந்தன. தலைக்கவசத்தில்ää  பிரபஞ்ச எம்ஜீ’ இணைப்பு அண்டெனா..! பிறை வடிவத்தில் சூடியிருந்தாள். அதில்ää கிரகத் தளங்களின் வரிசைகள்.. இப்படியே லாவண்யா ஏழு விண்வருடங்களாக இருந்து வருகிறாள்.

       லாவண்யாவைத் தவிரää அந்த ஆய்வு கூட உப கிரகத்துள்ääதலைமை விஞ்ஞானியான உபேந்திரர்.. இன்னும் சில பயிலுனர்கள்.ää எல்லோரும்ää பிரபஞ்சவெளியியலில் ‘P3’ பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞானி உபேந்திரர்ää  ‘டெலிமிஸியில்ääலாவண்யாவை அடைந்தார். அவள் ஒரே சீராக சீஆர்எஸ்கதிர்களைப் பிரயோகிப்பதை அவதானித்தார். திருப்தியாக இருந்தது.  கடந்த மிலேனிய யுகம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த  நுஸ்ரீ ஆஊ2 (சக்தி சமன் திணிவு தர காலல் வேக வர்க்கம்.) என்ற விதி பிரபஞ்ச சக்தியின் அளவீட்டுக்குப் பொருந்தாது எனக் கைவிடப்பட்டு விட்டது.  பிரபஞ்ச சக்தியை அணுக்களால் கணக்கீடு செய்வது பற்றிய  ஆராய்ச்சியில்தான்  லாவண்யா வெகு தூரம் முன்னேறியிருந்தாள்.  ஏழு விண்வெளிவருட காலத் தவம் இது.

       இதில்ää விஞ்ஞானி உபேந்திரர் வெற்றி பெற்று விட்டால்..?  ‘நானும் ஒரு பிரபஞ்சத்தின் கடவுள்..!”  உபேந்திரரின் தாடியைக் கண்ணீர் நனைத்தது.  இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால்ää  அவர் கண்டுபிடிக்க முயற்சித்துள்ள இந்த பிரபஞ்ச வாய்ப்பாடே இனி பிரபஞ்சத்தை ஆளும். அண்டத்தின்ää பதிநான்கு கிரகங்கள் இவரின் நேரடி ஆளுகைக்குள் வரும். லாவண்யாவுக்கு இதொன்றும் தெரியாது. அவளது தவம் இவ்வாராய்ச்சியின் வெற்றி ஒன்றுதான் பிரபஞ்ச சக்தியை அளவீடு செய்யும் ஆழ்ந்த  இணையத்தவத்தில்ää அவள் ஆழ்ந்திருந்தாள். 

    அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி உபேந்திரர் திடுக்கிட்டார். கொஞ்சம் குழப்பமானார். ஏதோ பிழையாகி விட்டதோ என நினைத்தார்.  ;பேஸிலிமிலியை உற்று நோக்கினார்.  பதற்றமாகி வியர்த்தார். லாவண்யாவின் தலைமீதிருந்த பிறைசூடி இணைப்பு பச்சையாக ஒளிர்ந்தது.  அதே நொடியில் கிரகத் தொடர்பாடல் தளம் அறுந்தது.  அப்படியானால்ää.? விஞ்ஞானி உபேந்திரருக்கு இனம் புரியாத பயம் அப்பிக் கொண்டது.  சட்டென  ஒலிவிரிகனை ஏவினார்.  லாவண்யாவுக்குள் அவற்றை வலியுறுத்திப் பதித்தார். வேகவேகமாக இயக்கினார். ஆயினும் கூடää கீழேயிருந்துää சில ரோபோக்கள் புகைந்து கொண்டிருப்பது தெரிந்தது.  என்ன நடந்திருக்கும் என உணரு முன்னரேää ஆய்வு கூடம் தனது கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தது. அடுத்த நொடியில்..

()

                     அவாவும்ää புலணுணர்வும்ää மனவுணர்வும் ஏனைய உணர்வுகளும் கெட்டுää  அடையும் நிர்வாணம் என்று  சம்யுக்த நிகாயத்தில்ää கூறப்படுவதை மிலிந்த பங்கமோää விசுத்தி மார்க்கமோ பொய்யாக்கியதில்லை.  அவ்வாறாயின்ääகேனோபநிடதத்தின் கூற்றும் பிழைத்து விடுமே..குரு உபமந்யுவின் சிந்தனை நீண்டு கொண்டேயிருந்தது.  அவரது முய்றசி  மஹாசக்தியின் வலிமையை தனது மனவலிமையால் அளவிட்டு அடக்கியாள்வது என்பது. அவ்வாறு முயற்சி பலிதமாகும் போதுääகுருஉபமந்யு  தானே ஒரு படைப்புலகம் ஸ்தாபித்து அதற்கு முழுமுதற் கடவுளாக இருக்க முடியும். ஸ{வாஹிமாதாவின் மூலமாக அடையும் இந்த மாதவத்தின் முடிவு..?  கிடைக்குமா..?

       குருஉபமந்யு சட்டென எழுந்தார்.  மாதாவை நோக்கி நடந்தார். ஸ{வாஹிமாதா அவ்வாறே சிலையாகியிருந்தாள். எதிரே பவ்வியமாக அமர்ந்தார். தொடர்ந்து அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்ää வெகு நேரமாக உடம்பில் ஒரு அசைவுமற்று அப்படியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.  படிப்படியாக குரு தனது உடலுணர்வை இழந்து கொண்டிருந்தார். எல்லா வலிமையைiயும் தனது மனதுக்குக் கொணர்ந்தார். உடன்ää  சூட்சும நிலையிலானார்.  அச்சமயம்ää அவரது நெற்றிப் பொட்டிலிருந்து  ஒரு ஊதா நிறக் கீற்று புறப்பட்டு ஸ{வாஹிமாதாவின் நெற்றிப் பொட்டை ஊடுருவியது.  மாதாவின் மனத் தளத்தில்ää குருவின் உச்சாடனங்கள் பதிவாகிக் கொண்டிருந்தன.

 சக்தி..ஓம்..!

 கோடித்தடவைகள் உச்சரிக்கப்பட்டுää அலைவடிவமாக்கப்பட்ட மந்திரம். மாதாவுக்குள் தெளிவாகப் பதிவாயின. ஏழுகோடித் தடவைகள் உச்சாடனம் செய்யப்படல் வேண்டும்.  இது  ஏழாவதும் இறுதியானதுமான உச்சாடனம். மிகத்  தீவிரமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்த குருவுக்குள் அது நிகழ்ந்தது.  சட்டென அவரது உடலுணர்வு நினைவில் வந்தது. ஊதாக் கீற்று உடன் மறைந்தது. இது பிழை. ஏதோ பிழையாகி விட்டது. எங்கோ பிழை.. ஆனால்ää{வாஹிமாதாவுக்குள் குருவின் கட்டளை அவசரமாகத் தேவைப்பட்டது.. அவளது குண்டலினி சக்தி எழும்பத் தொடங்கிpருந்தது.  அதே விநாடியில் தேவை.. உச்சாடனம்.. உச்சாடனம்.. உடனே தேவை..  இதோ சக்தியை என் மனவலிமை கொண்டு அடக்குகிறேன்..  இன்னும் ஏழே ஏழு தடவைகள்.. உச்சரியுங்கள் குருவே.. விரைவாக.. விரைவாக.. இதோ நீங்கள் கடவுள்.. நான் உங்கள் இடது பாகத்தில்.. ஓஹ்..!  உச்சாடனம் செய்யுங்கள் குருவே..   குரு உபமந்யு தெளிவாக உச்சரித்தார்..

 சக்தி..ஓம்..!

 ஒன்று.. இதோ பூத கணங்கள் விலகுகின்றன.. கடவுளின் கணங்கள்nருங்ககின்றன.. இதோ.. இரண்டு.. அலைவடிவ உச்சாடணம் இதோ கடவுளை அண்மிக்கிறது..  மூன்று.. இதோ..  நான்கு.. சக்தி..ஓம்..!’ ஐந்துää ‘சக்தி..ஓம்..!’ää ஆறு.. சக்தி..ஓம்..!’   இன்னும் ஒரேயொரு கணம்..! இதோ.. இதோ.. ஸ{வாஹிமாதாவின் குண்டலினி நீலச்சிவப்பில் உச்சிப் பிறையிலர் தெரிந்தது. இதோ.. ஏழு..?  ‘சக்...?’    குருவால் உச்சரிக்க முடியவில்லை. ஏழாவதும்ääஇறுதியானதுமான உச்சாடனத்தை செய்ய முடியவில்லை.. எங்கே..?   குருவே..! குருவே!!.   ஆனால்..ää  குருவால் உச்சரிக்க முடியாத அந்த ஒரு கணத்தில் அது நிகழ்ந்தது.  எது..?

 ()

                     

      விஞ்ஞானி உபேந்திரர் நிதானப்பட்டார். பிழைதான்..  அவரது துரிதமான கட்டளைகளால்ää ‘ரோபோக்கள் உயிர் பெற்றன. தம்மைச் சீராக்கின.. பயிலுனர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். அனைத்தும் மீள் வடிவம் பெற்றன.. லாவண்யாயாவின்ää  பிறைசூடி அன்டெனாஇயங்கியது. அதில்ää  மறுபடியும் கிரகத்தளங்கள் இணைந்தன.. ஆராய்ச்சி வெற்றியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை எல்லோரும் புரிந்து கொண்டனர்.  இன்னும் ஏழு நிமிடங்களில்ää 7ஓம் அம்பியர்கள்  கணக்கில் ஊடுருவிச் செலுத்தினால் சரி..!   அவரது நெற்றியை வெற்றி முத்தமிடக் காத்திருக்கிறது. முழுப் பிரபஞ்சக் கடவுளாக அவரை அங்கீகரிக்கப் போகிறார்கள்.அனைவரும் என்னை வணங்குவீர்களாக.. இதுதான் எனது பிரபஞ்ச வாய்ப்பாடுää இதுதான்..!  இனி இதுதான் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும்..  லாவண்யாவினதும்ää விஞ்ஞானி உபேந்திரரினதும் விழிகள் சந்தித்தன. பெருமிதத்தில் அவை நனைந்தன.  ஏழு பிரபஞ்ச வருடங்களாகää ‘சீஆர்எஸ்’ கதிர்கள் ஓம்’ வாய்ப்பாட்டுக் கணக்கில்ääஊடுருவியதில்ää விண்வெளியில் ஒரு புதிய உலகம் அந்தரத்தில் அமைந்து கொண்டிருந்தது. இன்னும் ஏழு நிமிடங்கள் ஏழு ஓம்கள்  ஊடுருவினால் சரி..

       இதோ அந்த வெற்றியின் நிமிடங்கள்..  ஒருää  ‘ஓம்..’  இரண்டு. ஓம்..’  இதோ புதிய பிரபஞ்சம் தயாராகிறது.. மூன்று..ஓம்..’ää ஆஹாää புதிய கிரகம்.. புதிய உலகம்..ää புதிய கடவுளின் அவதாரம்.. நான்.. இதோ.. நான்கு.. ஓம்..’ ஐந்து.. ஓம்.’  ஆ.. என்ன அழகான உலகம்..   ஆறு.. ஓம்..’  ஏழ்..?  ‘ஓ....’   என்ன இது..?   ஒரு கணத்துக்கும் குறைந்த  அந்த நேரத்தில் அது நிகழ்ந்தது.. எது..?

 

()

       குருஉபமந்யுவால் உச்சாடனம் செய்யப்படாத அந்த ஒரு கணத்தில்ää  ஒரு மஹாஆச்சரிய ஊதாநிற ஒளிவெள்ளம்  ஆகாயத்தில் ஏகமாகப் பிரகாசித்தது.  ஒரே நொடியில் அது மறைந்தது. அடுத்த கணத்தில்ää  10மியிலிருந்தää குருஉபமந்யுää{வாஹிமாதாää ஏழு முனிபுங்குவர்கள்ää  ஆஸ்ரம  சுற்று வட்டாரம் அனைத்தும்ää ஒரு புல் பூண்டு கூட மிச்சமில்லாமல்ääகருகிப் போயின. சக்தியின் கோர வலிமையை  உணரவும் அங்கு எதுவுமில்லை. மௌனம் ஒன்றே சக்தியைப் புரிந்து கொண்டாற்போல மௌனமாக இருந்தது.

()

       நீலத்திரையில் சக்தியின் புதிய வாய்பாடு பதிவாகவிருந்த அந்த ஒரு நொடியில்ää ஒரு மஹா ஆச்சரிய ஊதா நிற ஒளிவெள்ளம் ஆகாயத்தில் ஏகமாய்ப் பிரகாசித்தது. அடுத்த கணம்ääஅது மறைந்தது. விஞ்ஞானி உபேந்திரர்ää லாவண்யாää பயிலுனர்கள் ஆய்வுகூடச் சுற்று வட்டாரம்ää ‘டெல்டாவெளி’  அனைத்தும் மிச்சமில்லாமல் கருகிப் போயின. மௌனம் ஒன்றேää சக்தியை அளவிடும்ää புதிய வாய்ப்பாட்டை அறிந்துகொண்டாற் போல் மௌனமாக இருந்தது. சக்தி சமன் மௌனம்.

 இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை.199798தினக்குரல். 1998.

 

 

\

No comments:

Post a Comment